"கண்ணீருடன் கவித்துளிகள்..." - கிறிசாந்தி
பத்து வருடங்களில் பழகிய
-
சில நாட்கள்
பண்பட்ட உங்கள் முகத்தில்
-
கண்டதும் புன்முறுவல்
எதைப் பேசுவதேன்று நான்
-
சிந்திக்குமுன்னே
என்னவென்று நலம் கேட்பீர்
-
முந்திக்கொண்டு நீரே.
பக்கமாய் பழகிக்கொள்ள வந்தது
கொரோனா
-
பழுகாமத்தில் கூடிக் குலாவ
சிறுபிள்ளைகள் குடும்பமாய்
குதூகலிப்பு
-
காணும் போது உங்களுக்கு பூரிப்பு
என் மக்கட்கொரு ஆங்கில கணித
பாட
-
வழிகாட்டல்
என்னைக் கண்டவுடன் குழந்தை
வளர்ப்பு
-
கருத்தாடல்.
யாவருடனும் அளவளாவ அதீத ஆசை
-
அங்கிள் உங்களுக்கு
கடைசி சில நாட்களும்
வைத்தியசாலை
-
விடுதி இல நான்கிலும்
உங்களுடன் நான் கழித்த
பொன்னான
-
நேரத்தில்
என்னிடம் சொல்லியதோ பல
-
கருத்துக்கள்
இன்னும் என் காதில்
கணீரென்று
-
ஒலித்துகொண்டே இருக்கிறதே.
மறக்கத்தான் முடியுமா - அந்த
மலர்போன்ற நினைவுகளை
இறந்தாலும் வாழுமையா –
உங்கள்
-
மணியான வார்த்தைகள் என்னுள்ளே.
மருமகள் கிறிசாந்தி
(திருமதி. கிறிசாந்தி சித்தார்த்தன்)
Comments
Post a Comment