"அன்பான அண்ணா, சோதி அண்ணா..." - அன்புத் தங்கை, Joy.
எனக்கு என்னுடைய அண்ணாவை அன்பான ஒரு அண்ணாவாக, நல்ல சந்தோசமாக எல்லோரையும் சிரிக்க வைத்திருக்கும் அண்ணாவாகத்தான்
எப்போதும் நினைப்பு.
எங்களை G.C.E.
O\L சோதனைக்கு ஆயத்தப்படுத்தி அனுப்பிய நல்ல ஒரு
ஆசிரியர் அவர் எனக்கு. அந்த நாட்கள் என் வாழ்வில் மறக்கவே முடியாது.
Ukulele ஐ வைத்து தட்டித்தட்டி நன்றாக பாடுவதையும் எப்போதும் நினைப்பேன்.
கடைசியாக கொழும்பில் அவரோடு செலவிட்ட
ஒருசில நாட்கள் இப்போது என் கண்முன்னே உள்ளது.
“ஜீவனின் அப்பம்” பாடல் இப்போதும்
அவரின் குரல் என் செவிகளில் அவரைக் கொண்டுவரும்.
அவர் ஆண்டவரின் சந்நிதியில், அவரை துதித்து
மகிழ்ந்து கொண்டிருப்பார். இதுவே இன்று எம் ஆறுதல்.
அன்புத் தங்கை,
Joy.
From Germany
Comments
Post a Comment