"அன்பான அம்மப்பா!!!" - சி.மிஷானா ஷப்னிக்கா & ர.சோமியா
நீங்கள் உறவுகளை நேசிப்பதில் உன்னதர். சிறுபராயம் முதல் எங்களது வீட்டிற்கு வரும்போது பல பாடல்கள்,கதைகள் கூறி மகிழ்விப்பீர்கள்.
நாங்கள் எது செய்தாலும் குறை கூறாமல் “ That’s good” என்று கூறுவீர்கள். நாங்கள் கொழும்பில் பல வருடங்கள் வசித்தாலும் அங்குள்ள பல இடங்களை நீங்களே காட்டியதாக கூறி பெருமைப்படுவார் எனது அம்மா.
உம்முடைய கைகளில் வேதத்தை கண்டதை விட உம்முடைய வாழ்வில் கண்டதே அநேக சந்தர்ப்பங்கள்.
“ஆண்டவர்
பாதத்தில் ஜீவகீதம் பாடி மகிழ்ந்திருக்க பிரார்த்திக்கிறோம்”
என்றும் உம் நினைவுகளுடன்,
சி.மிஷானா ஷப்னிக்கா
ர.சோமியா
Comments
Post a Comment