Posts

"நீங்கா நினைவுகளாய்..." - அன்புப் பிள்ளைகள், ஷரோன்,சோஜிகாந், மகரிஷன், பேரிசைப்பிரியா

Image
அன்பின் பெப்பா, வாழ்கையில் பிரிவுகள் வருவது யதார்த்தமே.ஆனால் உம் பிரிவோ எங்கள் அனைவரையும் ஆழ்துயரில் ஆழ்த்தியதென்ன.. ? ? அன்பிலும் , பண்பிலும் , கண்டிப்பிலும் , கரிசனையிலும் உம்மை மிஞ்சுவதென்பது எவராலும் இயலாத காரியமே...எங்கள் வாழ்க்கைக்கு ஒரு நல்ல தகப்பனாகவும் , நண்பனாகவும் சிறந்த ஆலோசகராகவும் எங்கள் வாழ்கையின் வழிகாட்டியாகவும் இருந்தீங்க...காலையில் தினமும் நாங்கள் முதலில் கேட்கும் வார்த்தை “தம்பா...குஞ்சு...எழும்புங்கோனா...” என்பதே. ஆனால் கடந்த சில நாட்களாக நாங்கள் அந்த குரலை மீண்டும் ஒருமுறை கேட்கமுடியாதா என எண்ணித் தவித்த நாட்களுமுண்டு. நாங்கள் உங்கள்   வீடு வரும் போது கூட எங்களை இன்முகத்துடன் வரவேற்று அன்பாக உபசரிப்பீர்களே பெப்பா..! எங்களுக்கு ஒரு தலைசிறந்த ஆசானாகவும் வழிகாட்டியாகவும் இருந்தீங்க அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம். நீங்க இப்ப எங்கள விட்டு பல மைல் தூரம் கடந்து சென்றிருந்தாலும் உங்கள் நினைவுகள் எம்மை விட்டு நீங்காது. ஏழை எளியவர்களுக்கு உதவும் மனப்பாங்கு மற்றும் வாயில்லா ஜீவன்களுக்கு இரங்கும் குணமும் உம்மிடம் இருந்து நாம் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடங்கள...

"Daniel Gnanasothy Veerasingam: A Role Model For His Students" - T David Nidharshan

Image
       It's very rare that we come across a person who has a strong methodology towards a sustainable approach in life.      Veerasingam sir, born in Thondamanaru, Jaffna and had his early education at Hartley College and completed his B.Sc. degree at the University of Ceylon. Around 1979/ 1980 first I met Veerasingam sir at Kalmunai Wesley, where he was a chemistry teacher for cluster classes at Kalmunai Wesley and Zahira colleges. His practical way of teaching highly appreciated by me and many other students.      He has given more attention to practical studies and English in his classes. He always encouraged students to learn English and says that English is a window to see the world.      His commitment towards the church and social activities were many, and I can point out certain activities, especially his service as a General secretary to Kalmunai YMCA and a preacher at Methodist church. This was the golden...

"கண்டுமணியின் அதிபராய் D.G.அவர்கள்" - ஆ.புட்கரன் (அதிபர் , பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம்)

Image
  மதிப்புக்குரிய அமரர் D . G .வீரசிங்கம் அதிபர் அவர்கள் ஆசிரியராக , அதிபராக இப்பாடசாலையின் வளர்ச்சியில் தன் பங்களிப்பினை வழங்கியிருந்தார் என்பது நாம் அறிந்ததே. அவர் ஆங்கில பாடத்திற்கான ஆசிரியராக இங்கு நியமனம் பெற்றபோது அவரது ஆங்கில வார்த்தைப் பிரயோகத்தை கண்டு புளகாங்கிதம் அடைந்தோம். அக்காலம் மிகவும் நெருக்கடியான ஒரு காலம் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறான சூழலிலும் மாணவர்களின் கல்விநிலை இழிநிலைக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் கருத்துடன் உழைத்தவர். தான் மட்டக்களப்பு நகரில் வசித்த போதும் மாலை நேர வகுப்புகளை நடாத்தி மாணவர்களின் உயர்வுக்காய் உழைத்தவர்.             இக்காலப்பகுதியில் தான் இங்கு அதிபராகப் பணியாற்றிய திரு.தெ.சுப்பிரமணியம் அதிபர் அவர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றபோது 25.01.1994 ம்     நாள் அதிபர் எனும் பொறுப்பை தன் தலைமீது சுமக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டார். அமரர். D.G. வீரசிங்கம்ஐயா அவர்கள், இருந்தபோதும் அவர் எதிலும் விட்டுக் கொடுக்கவும் இல்லை, எதைக்கண்டு அஞ்சவுமில்லை. தனது பணியை ஆர்வத்துடனும்...

"Veerasingam Uncle…" - நிரோஷா

Image
       மறக்க முடியாத ஆளுமை. எங்களது அருமையான குடும்ப நண்பர். சுவாரசியமாக கதைப்பதில்   வல்லவர். நான் சிறுமியாக பாடல் குழுவில் இருக்கும் பொழுது   ஆலயத்தினுள் Uncle இருக்கிறார் என்பதை கண்டுபிடித்து விடுவேன். அப்படியான திறமைமிக்க பாடகர். தன்னிகரில்லா இறைபற்று உடையவர்.      ஆசிரியராய், அதிபராய் செய்யும் செயல்களுக்கு அப்பால் சென்று   ஏழை எளிய   மாணவர்களுக்கு பொருளுதவி செய்து கல்வி பயில உதவி செய்தவர். என்னை காணும் போதெல்லாம் “பழுகாமத்தில் பிள்ளைகளுக்கு பாடப் புத்தகங்கள் இல்லாமல் இருக்கிறது அவைகளை எடுத்து தர முடியுமா?” என அக்கறையுடன்   கேட்பார். பின்தங்கிய மாணவர்களையும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களையும் தம் வீட்டுக்கு அழைத்து வந்து கற்பிப்பார். கதைகள் , பாடல்கள் வாயிலாக வேதக் கதைகளை பலரும் கற்கப் புதிய உத்திகளைப் புகுத்தி வகுப்புக்கள் நடத்துவதில் வல்லவர். அவரின்   உற்சாகத்தை கண்டு நான் பலமுறை வியந்திருக்கிறேன்.      அதுமட்டுமல்ல அவரது குடும்ப உறுப்பினர்களின்   வாழ்வில் மிக அக்கறை கொண்டு உறவினர்களின்...

என்றும் நீங்காத பெறா மகன் கபிலனின் நினைவுகளிலிருந்து...

Image
       இந்தப் பிரபஞ்சத்தின் நீட்சிக்கும் மனித இனத்தின் இருப்புக்கும் ஒரு மனிதனை யாராவது பேச வேண்டும், யாராவது ஒருவர் கவனிக்க வேண்டும், யாராவது ஒருவர் பாராட்ட வேண்டும், யாராவது ஒருவர் பெருமை கொள்ள வேண்டும், யாராவது தொடர வேண்டும், யாராவது ஒருவரை ஈர்க்க வேண்டும், யாராவது ஒருவர் கேட்க வேண்டும். எனது வாழ்வின் படி நிலைகளிலும் அப்படியான ஒருவராக வாழ்ந்து வழிகாட்டிக் கொண்டிருப்பவர் தான் எனது வீரசிங்கம் அங்கிள்.        நான் இன்று நம்ப முடியாத அளவுக்கு உங்களுக்கு நன்றி உடையவனாக, கடமைப் பட்டவனாக இருக்கிறேன். ஏனெனில் இவை அனைத்தையும் பெற்றுக்கொண்டு அனுபவித்த ஒருவனாக நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். என்னுடைய இளமைப் பருவத்தையும் பாடசாலைக் கல்வியையும் உங்களுடன் இருந்து அந்த நாட்களை செலவிட்டது இன்றும் எனது மனதில் நீங்காத நினைவுகளாய்.............      குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், அயலவர்கள், ஏன் இந்த சமூகத்திற்கும் என சகல இன்ப துன்பங்களிலும் முழுமையாக எப்பொழுதும் உங்களை ஈடுபடுத்தி சமூக முன்னேற்றத்திற்காக உழைத்தவர்களில் அங்கிளும் ஒருவர். ...

"பெரியப்பா..." - சுமிதா, சுஜானி

Image
அன்பில் சிறந்த தந்தையாக ஆற்றல் மிகுந்த எங்கள் ஆசானாக பண்புடன் வாழ்ந்த மனிதனாக பலரையும் மதிக்கும் நண்பனாக நன்றான உலகில் நல்லோனாக நற்றமிழ், ஆங்கிலம் பற்றுயர் கலைஞனாக என்றுமே எங்கள் இதயம் வாழும் பெரியப்பா...   அன்பின் பிள்ளைகள், சுமிதா, சுஜானி

"அன்பான அம்மப்பா!!!" - சி.மிஷானா ஷப்னிக்கா & ர.சோமியா

Image
  நீங்கள் உறவுகளை நேசிப்பதில் உன்னதர். சிறுபராயம் முதல் எங்களது வீட்டிற்கு வரும்போது பல பாடல்கள் , கதைகள் கூறி மகிழ்விப்பீர்கள்.                                  நாங்கள் எது செய்தாலும் குறை கூறாமல் “ That’s good ” என்று கூறுவீர்கள்.         நாங்கள் கொழும்பில் பல வருடங்கள் வசித்தாலும் அங்குள்ள பல இடங்களை நீங்களே காட்டியதாக கூறி பெருமைப்படுவார் எனது அம்மா.                    உம்முடைய கைகளில் வேதத்தை கண்டதை விட உம்முடைய வாழ்வில் கண்டதே அநேக சந்தர்ப்பங்கள்.                                           ...

"கண்ணீருடன் கவித்துளிகள்..." - கிறிசாந்தி

Image
  பத்து வருடங்களில் பழகிய -           சில நாட்கள் பண்பட்ட உங்கள் முகத்தில் -           கண்டதும் புன்முறுவல் எதைப் பேசுவதேன்று நான் -           சிந்திக்குமுன்னே   என்னவென்று நலம் கேட்பீர் -           முந்திக்கொண்டு நீரே.   பக்கமாய் பழகிக்கொள்ள வந்தது கொரோனா -           பழுகாமத்தில் கூடிக் குலாவ சிறுபிள்ளைகள் குடும்பமாய் குதூகலிப்பு -           காணும் போது உங்களுக்கு பூரிப்பு என் மக்கட்கொரு ஆங்கில கணித பாட -           வழிகாட்டல் என்னைக் கண்டவுடன் குழந்தை வளர்ப்பு -           கருத்தாடல்.   யாவருடனும் அளவளாவ அதீத ஆசை -           அங்கி...

மருமகன் கணேஷின் நினைவின் சில பக்கங்கள்

Image
       இருபத்து நான்கு வருட அறிமுகத்தில் என்னுடன் அன்புடனும் பண்புடனும் பழகி ஆறுதல் வார்தைகளுக்கூடாக எங்களை நேசித்து வீட்டிற்கு வரும் போதும் போகும் போதும் இன்முகத்துடன் வரவேற்று , வழியனுப்பி வைத்ததையெல்லாம் மறக்கவே முடியாது.      உங்களுடன் ஒரே வீட்டில் இருந்த அந்த குறுகிய நாட்களில் அதிகாலை ஐந்து மணிக்கு தேனீருடன் வந்து தோள்களில் தட்டி “கணேஷ் எழும்புங்கோ” என்று கூறும் அன்பான வார்த்தையை என்னால் மறக்க முடியாதுள்ளது .      உங்களது இறுதி நாட்களில் வைத்தியசாலையில் அனுமதித்த அன்று “கணேஷ் சுடுபாண்   வா ங்கி வாங்கோ”என்று நீங்கள் கூறிய போது அதை வாங்கி உங்களுக்கு தந்து கொள்ள உங்கள் உடல் நிலை இடம் தரவில்லை.      உங்கள் உணர்வின்போது “கூட்டிப்போக கணேஷ் வருமோ”என்று எதிர்பார்த்திருந்தீர்கள்.   இவ்வார்த்தைகள் எப்போதும் என் நினைவில் நிலைத்திருக்கும் .      உங்கள் ஆத்மா சாந்திக்காக நானும் உங்கள் பிள்ளை ரதியும் , உங்கள் பேரன் மகரிஷனும் இறைவனை பிராத்திக்கிறோம் .   இப்படிக்கு , அன்புள்ள மருமகன் , ...

"நீங்காத நினைவில் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட உத்தமர் வீரசிங்கம் சேர்." - குழந்தைவேல் சிவசிதம்பரம்

Image
       சாந்தமான பார்வை பெருமையிலும் எளிமை நேர்மையின் சிகரம், எல்லோரையும் மதிக்கும் சுபாவம், கள்ளமில்லா மனம்,எப்போதும் இறை சிந்தனை ,ஆசிரியர் தொழிலுக்கு சான்று பகரும் முன்மொழி ஆசான்.      பெருமையிலும் எளிமையாக வாழ்ந்து காட்டிய உத்தமர் .இறைதேசமும் தமிழ்பற்றும் கல்வியில் சிறந்த உயர்ந்த குடும்பத்தில் யாழ் மண்ணில் தொண்டைமானாற்றில் பத்து சகோதர சகோதரிகளுடன் இளமையை கழித்த வீரசிங்கம் சேர், கொழும்பு பல்கலைக்கழக பௌதிக விஞ்ஞான துறை பட்டதாரியாகி, மீன்பாடும் தேனாட்டை   நோக்கிய ஆசிரிய தொழிலின் நிமிர்த்தம் வந்து அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை மத்திய   கல்லூரியில் சிறந்த ஆசானாக பல வருட காலம் சேவை புரிந்து கொண்டு இருக்கும் போது தேனாட்டின் சிறந்த தாதியாக கருணையுள்ளதுடன் சேவை செய்து கொண்டிருந்த மலர்   அம்மணியை கரம்பிடித்து உங்கள் உரித்தாக உதிர்த்த முத்தான பிறேமனுடன் மீன்பாடும் ஓசையுடன் கல்லடி பாலத்தின் அருகில் அமைந்த அழகிய வாசஸ்தலத்தில் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது திடிர் என நோய் தழுவி எம்மை விட்டு பிரிந்து சென்ற வீரசிங்கம் சேரின் துள்ளிய பார்...

"This is my tribute to Sothy Anna" - Mala, from Gnananayagam family

Image
  When my younger sister Kala, brother Sujan and I were visiting my sister, during holidays in Batticaloa, Sothy Anna, called Daniel Veerasingam was staying with my Akka and Aththan. We loved his jovial and amusing ways of entertaining and singing songs and walking on the roads of Batticaloa singing carols with him playing his small guitar instrument. His loving caring attitude made the atmosphere to be very friendly. We still cherish such memories and thank God for giving us this chance to meet and know him personally. We, Mala, Kala and Sujan value him very much for his God given special life. Thank you for the privilege we have in writing for this tribute. May God bless Sothy Anna's family and all who are associated with him. With loving memories. Mala, Also on behalf of Kala and Sujan from Gnananayagam family.

"சோதி மாமா…" - அன்பின் மருமகள், Christina Mercy

Image
       சோதி மாமாவை நினைக்கும்போது எனக்கு எவ்வளவோ நல்ல இனிமையான நினைவுகள் மனதுக்கு வருகிறது. நாங்கள் ஜேர்மனியிலிருந்து தொலைபேசி ஊடாக பேசும்போதும் சரி , நேரே இலங்கைக்கு வந்து அவரோடு நேரங்கள் செலவழிக்கும்போதும் சரி , அவர் எங்களது படிப்பிலே , எங்களது அறிவு வளர்ச்சியிலே அதிகம் அக்கறை கொண்டவராக இருப்பார்.      என்னுடன் அடிக்கடி English ல் பேசுவார். எனக்கு நல்ல ஞாபகம் உண்டு. நான் சின்ன பிள்ளையாக அங்கு வந்திருந்த நேரங்களில் எனக்கு English books வாங்கி தந்திருக்கிறார். நான் மட்டக்களப்பிற்கு வந்திருந்த நேரங்களில் அவர் எவ்வளவாக அன்பாக பேசி பழகுகிறார் என்பதையும் , கஷ்டப்பட்டவர்களுக்கு எவ்வளவு உதவிகளைச் செய்கிறார் என்பதையும் அவதானித்து ஆச்சரியப்பட்டேன் ; அது என் இருதயத்தைத் தொட்டது.      கடைசியாக நான் எனது கணவரோடும் மகளோடும் வந்து சோதி மாமா குடும்பத்தோடு செலவழித்த சில நாட்கள் மறக்க முடியாதவை. எங்களை அவர் அன்பாக உபசரித்து கவனித்துக்கொண்டது மட்டுமல்லாது , எனது கணவர் சாமுவேலுக்கும் மாமாவை நன்றாக பிடித்துக்கொண்டது. அருமையான ஒரு மாமா with a big hear...

"வேகமாய் முடிந்ததுவே வாழ்க்கை" - மீளாத்துயரில், புனிதா

Image
  முந்தி வந்த அத்தான் எங்கள் மூத்த தலைவன் அவர் மச்சாள் என அழையாமல் சகோதரர்   மாதிரி எங்களை பெயர் சொல்லி அழைப்பீர்களே அத்தான் அன்புடன் பண்புடன் பாசமாய் ஓர் குடும்பமாய் எங்களுடன் சேர்ந்து வாழ்ந்தீர்களே அத்தான் குடும்பத்திற்கு பெருமைதேடி குலவிளக்காய் இருந்தீர்களே ஆசிரியராய் கல்வி பயின்று கணிதமுடன் விஞ்ஞானம் ஆங்கிலம் போன்றவற்றை வீட்டினிலே கல்வி நிலையம் அமைத்து வித்தைகள் பல   காட்டி விளக்காய் போதித்தார்களே ஏடு முதல் A \ L வரை கல்விக்கு உரம் ஊட்டி கல்விக்கு வழிசமைத்தீர்களே விசுவாச வாழ்க்கையில் கிறிஸ்தவ பணிக்கு நீங்கள் செய்த அளப்பெரிய பணி மேலானது சமூகத்திற்கு நீங்கள் செய்த தொண்டு சமூக மக்கள் உங்கள் வீட்டிக்கு வரும்போது அவர்களுடன் நீங்கள் கதைக்கும் அன்பான வார்த்தை அவர்களுக்கு நீங்கள் செய்யும் கொடைகளை நாங்கள் எவ்வாறு மறப்போம் அத்தான் நேரம் பாராது காலம் பாராது எங்களுக்கும் சமூகத்திற்கும் செய்த பணி அளப்பெரியது அத்தான் வேகம் விவேகமானது அல்ல என்பது போல் உங்கள் வாழ்வு வேகமாய் முடிந்ததுவோ என துயரில் அழுகிறோம்.   மீளாத்துயரில், புனிதா

"About Sothy. From Selvar Anna." - Jacob. G. Veerasingam

Image
       Daniel, fondly called by us siblings as “Sothy”, was highly esteemed in our family. He was very loving, humble, and a genius in math. Our dear parents took time, pain and imparted very high values of Christ, to grow in them and be blessed.      Sothy very much loved his dear wife Malar and their brilliant son Breman and fiancée. He was rightly proud to impart his inheritance of Christ to his family based on Micah 6:8. He started his career as a Math teacher at Sammanthurai, excelled in his calling as a teacher, and became a very successful Principal; highly appreciated by all in society.      Sothy poured out his life in Batticaloa. As apostle Paul wrote to Timothy in 2 Timothy 4:7, Sothy fought to live an exemplary life, ran the race well and kept his faith.      My wife and I thank and praise God for the opportunity given to me to be his elder brother. Jacob. G. Veerasingam from Namibia  

"நினைவலைகள்…" - உடன்பிறவா சகோதரன், த. அ. பத்மசீலன்

Image
    " அண்ண" என்றழைக்கவேண்டிய உம்மை " அத்தான்" என்று நாம் அழைக்க , இன்று எம்மையெல்லாம் "ஐயோ" எனக் கதறவிட்டுவிட்டு நீங்கள் மட்டும் மண்ணினுள் மறைந்ததென்ன   உடன் பிறவா சோதரனே! வாழ்வில் சோதனைகள் பல கண்டு சோர்ந்து போகாமல் நீங்கள் சொந்தக் காலில் எவர்க்கும் சோலியின்றி இன்று சொர்க்கம் சென்றாயோ   பாரினில் பிறப்பும் இறப்பும் ஆண்டவர் செயல் அதையும் மறந்து வெதும்புதடா எம்மனது நீங்கள் இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால் பலரும் பல பயன்களை பெற்றிருப்போம்   தீர்க்கவொண்ணா நோயுன்னை தீண்டி காலவன் கரங்களுக்கு பரிசளிக்க நாவறண்டு எம்மையெல்லாம் கதறியழ வைத்ததுவே உன் நினைவுகள்   பூமியிலே மீளாத் துயில்கொள்ளும் நீங்கள் எமக்கும் சில காலம் எம் மண்ணுக்கும் செய்த தொண்டு எம் மனங்களில் இறுதிவரை நிலைத்திருக்கும். அத்தான் , உங்கள் ஆத்மா ஆண்டவர் சந்நிதியில் சாந்தி கொள்ள வேண்டி நிற்கிறேன்.   இப்படிக்கு , உங்கள் உடன்பிறவா சகோதரன் , த. அ. பத்மசீலன்